உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-3) மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பு என்று சொல்லியிருந்தேன் அல்லவா, புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சிக்காக லடாக் வந்திருந்தவர்கள் அணிவகுப்புதான் அது. விமான நிலையத்திலேயே அனைத்து ராணுவத்தினரையும் ஒன்று சேர்த்து பின்னர் அவர்களை அணிவகுத்து அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். அனைத்து ராணுவத்தினரும் சுமார் பதினெட்டிலிருந்து இருபத்து ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, அவர்களுக்கு மரியாதை செலுத்த எண்ணம் தோன்றியது. ஒரு சல்யூட் செலுத்தி விட்டு எங்களை தங்குமிடத்துக்கு அழைத்து செல்ல வந்த காரை நோக்கி நகர்ந்தோம். காற்றில் பிராண வாயு குறைந்ததை கொஞ்சம் கொஞ்சமாக உணர முடிந்தது. ஐந்து டிகிரி ஏற்றத்தை கூட திணறி திணறித்தான் என்ற முடிந்தது. ஒரு முக்கிய தகவல்: லே லடாக் பயணம் செய்ய விரும்புபவர்கள் அவசியம் நல்ல உடல் நிலை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, மூச்சு திணறல், ஆஸ்த்துமா உள்ளவர்கள் தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது நல்லது. கைவசம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் வைத்துக்கொள்வது சாலசிறந்தது. டீஹைட்ரேஷன் எனப்ப...
உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-2 ) முக்கிய தகவல். லே-லடாக் செல்லுவதற்கு உகந்த காலம் என்பது மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை. எனவே ஜூன், ஜூலை மாதங்கள் சிறந்தது. உலகத்தின் அதிகப்படியான உயரத்தில் உள்ள விமான நிலையங்களில் முதலில் வருவது "குஷக் பகுளா ரிம்போஷி" விமான நிலையம்தான். தரை மட்டத்துக்கு சுமார் 10500 அடிக்கு மேலே அமைந்துள்ளது லே விமான நிலையம். இந்த விமான நிலையத்துக்கு புது தில்லியிலிருந்தும், மும்பையிலிருந்தும் நேரடி விமானங்கள் உள்ளன. பெரும்பாலும் தூங்கி வழிந்துகொண்டு வரும் பயணிகள் கூட உத்திரகாண்ட், இமாச்சல பிரதேசத்தை விமானம் கடக்கும்போது பரபரப்பாகி மொபில் காமிராவை தயாராக வைத்துக்கொண்டு விமானத்தின் ஜன்னலை நோக்கி தாவுகிறார்கள். வெளியில் கொள்ளை அழகு. கரும்பச்சையில் ஆரம்பிக்கும் இயற்கையின் அழகு, பளீர் வெண்மையில் முடியும். அடர்ந்த மலைக்காடுகள், நடு நடுவே செம்மண் தீட்டியது போன்ற சிகரங்கள், இடை இடையே நீண்டு வீழும், வெண்ணிற அருவிகள், நீல நிறத்தில் தேங்கியுள்ள நீர்த்தேக்கங்கள், இவை யாவும் இமாச்சலப்பிரதேசத்தை தாண்டும் போது மாறுகிறது. மலை சிகரங்களில் திட்டு திட்டாக வெ...
உலகின் உச்சிக்கு ஒரு பயணம்; லே-லடாக்! (பாகம்-1) இந்த பயண தொகுப்பை தங்களோடு பகிர்வதற்கு இவ்வளவு காலம் ஆனதற்கு காரணம் இல்லாமலில்லை. கடந்த 2020 ஆண்டு முதலே நம் பாரதத்துக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் தொடர்ந்து எல்லை பிரச்சினை இருந்துகொண்டே தான் இருந்தது. டோக்லாமில் துவங்கி, கிழக்கு லடாக் பகுதிவரையில் மோசமான தாக்குதல்களில் இரு நாடும் ஈடுபட்டு, கணிசமான உயிர்த்தியாகங்களை இருநாடுகளும் சந்தித்தன. கலவரப்பகுதியாகவே இருந்து வந்த இந்த இமய மலைப்பகுதிக்கு இப்போது ஓரளவு தீர்வு கிட்டி உள்ளது என்றே கருதலாம். இரு நாடுகளும், தமது ராணுவத்தை பின்னேற செய்தது நமக்கு நிம்மதியை தந்துள்ளது. ஏற்கனவே இந்தப்பகுதியில், இரு நாடுகளும் பல வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறார்கள் என்பது நிதர்சனம். எனவே இந்த நல்ல தருணத்தில் என்னுடைய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்து இந்த பயண கட்டுரையை துவங்குகிறேன். உங்கள் மேலான ஆதரவுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி பாராட்டுகிறேன். 2019 ம் ஆண்டு வரை, ஒரு மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீர், இரண்டாக பிரிக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் மற்றும் லடாக் யூனியன் என்றா...
Hi!
ReplyDeleteYou are very late.See my photo and explanation in my blog at
http://neysamy.blogspot.com/2008/12/blog-post.html