தீபாவளி ஸ்பெஷல் - சிந்தனைக்கு



தீபாவளி என்றாலே பட்டாசும், பலகாரமும்தான். இவை இரண்டும் கலந்து சந்தோஷம் தருவது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த முறை பட்டாசு வாங்க வேண்டும்s என்று சொன்ன போது எனது அருமை புத்ரி 'வேண்டாம், வாங்காதே' என்று சொன்னபோது சற்று அதிர்ந்துதான் போனேன். போன வருடம் வரை தன் பங்குக்கு வேண்டியவற்றை தானே தேர்ந்து எடுத்து வாங்கியவள்தான் அவள். இந்த வருடம் அறிவு முதிர்ச்சியின் காரணமாக 'வேண்டாம்' என்று சொல்வதிலும் காரணம் இருக்கிறது. பட்டாசுகள் வெளிப்படுத்தும் புகையினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்புதான். காற்றில் உள்ள கார்பன்-டை-ஆக்சைடின் அளவு நூறு மைக்ரோக்ராம் இருக்கவேண்டும் என்பது தான் அளவு. ஆனால் தீபாவளி தினத்தன்று இந்த அளவு இருநூற்று ஐம்பதை தாண்டுகிறதாம். இன்னும் சில இடங்களில் இந்த அளவு நானூற்று ஐம்பதை தாண்டுகிறதாம். இதனால் ஆஸ்த்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பத்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும் சூழல் உண்டாகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இது ஒரு புறம் இருந்தாலும் பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் பாதிக்கப்படுவார்கள் என்ற சமாளிப்பு வார்த்தைகள் அவளை சமாதானப்படுத்தவில்லை. "பட்டாசு தொழிலில் பெரும்பாலும் சிறுவர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள், அது சரியா?" என்ற அவளின் எதிர் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் "கொஞ்சமாக வாங்கிக்கொள்ளலாம்" என்று கூறி வைத்தேன். நிச்சயமாக சிந்திக்க வேண்டிய விஷயம்.


சிந்திக்க வேண்டிய விஷயம்-2


இந்த படத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த யுகத்தின் தவிர்க்க முடியாத பிறவிகள். எலக்ட்ரானிக் சிப் தான். இதில் பயன்படுத்தப்படும் 'கபாசிட்டர்' என்ற பொருள் 'டான்ட்டலம்' என்ற மூலப்பொருளிலிருந்து பெருமளவு தயாரிக்கப்படுகிறது. இந்த டான்ட்டலம் என்ற மூலப்பொருளை பூமியிலிருந்து வெளியில் கொண்டு வருவதற்காக வெட்டப்பட்ட சுரங்கங்களினால் பல காடுகள் உலகம் முழுவதிலும் அழிக்கப்படுகின்றன. இதில் முக்கிய பங்கு வகிப்பது இந்தோனேசியா போன்ற கிழக்கிந்திய நாடுகளும், சில ஆப்பிரிக்க நாடுகளும்தான். இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகளில் பல காலங்களாக காடுகள் அழிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று நாம் காணும், 'சுனாமி', 'பூகம்பம்' போன்ற இயற்கை பேரழிவுகள். இந்த நிலையில் டான்டலம் என்ற மூலப்பொருளின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போவது மேலும் வேதனைக்குரிய விஷயம். இன்று நாம் பயன்படுத்தும் 'செல்லிடர் தொலைபேசி' இந்த பேரழிவிற்கு பெரிதும் துணை போகிறது என்பது நிதர்சனமான உண்மை. இந்தியாவும், சீனாவும் தான் உலகில் அதிகப்படியான அளவில் 'செல்போனை' பயன் படுத்துகிறது. இந்த நாடுகளில் தினம் ஒரு மாடல், தினம் ஒரு நிறுவனம் என்று போட்டா போட்டிக்கொண்டு செல்போன் உபயோகத்தை நம்மிடம் திணித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த விழிப்புணர்வு முக்கியமாக மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. மாதத்துக்கு ஒரு முறை செல்போன் மாற்றும் எண்ணத்தை விட்டொழித்தால் நம்மால் இயன்ற அளவுக்கு இயற்கையின் சீற்றத்தை தவிர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

Dharbhai - An article by TRS Iyengar

Namasivaya and Sivayanama - What I read, Want to Share

A stone in my shoe