கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-1 )
திடீரென்று கடவூர் எங்கிருந்து வந்தது என்று குழம்புகிறீர்களா? அதாங்க, திருக்கடையூரின் இயற்பெயர் 'திருக்கடவூர்' அதை சுருக்கி கடவூர்னு மாத்தி சொன்னா 'எதுகை,மோனையோட' எடுப்பா இருக்குமேன்னுதாங்க. கதை-கட்டுரைல இதெல்லாம் சாதாரணமுங்க. அறுபதாம் கல்யாணத்தில், கல்யாணம் குறித்து சில-பல தகவல்களை சொன்னேன் அல்லவா! இப்போது காத்மாண்டு பயணத்தை ஒத்து சில-பல தகவல்களை சுவாரசியமாக சொல்லலாமென்று இருக்கிறேன். "சும்மா, வளத்தாம சொல்லுங்க, அது சுவாரசியமா இருக்கா, இல்லையாங்குறதை நாங்க பாத்துக்கறோம்"னு நீங்க முணுமுணுப்பது கேட்கிறது. அப்போ நேரா விஷயத்துக்கு போயிடலாம். காத்மாண்டு பயணத்தின் சஸ்பென்ஸ் பற்றி முந்தைய பகுதியில் சொன்னது கொஞ்சம் உண்மைதான், என்றாலும் எனக்கு மறைத்துப்பேச எல்லாம் தெரியாது அல்லவா! அதனால் முழு உண்மையை சொல்லி விடுகிறேன். திருக்கடையூரில்தான் காத்மாண்டு பயணம் பற்றி எனக்கு சொல்லப்பட்டது என்றது கொஞ்சம் உடான்ஸ் தான். ஆனால், எனக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது மட்டும் உண்மை, உண்மை, உண்மைத்தவிர வேறொன்றும் இல்லை. காத்மாண்டு, நேபாள தேசத்தின் தலை நகரம். இமாலய மலைகளின் உச்சந்தலை...