கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-11 )
என் நண்பர், தம் உறவினர் ஒருவரின் ஷஷ்டி பூர்த்தியில், இருபத்து நாலு கலசங்கள் பார்த்ததாக கமெண்ட்டில் கூறியிருந்தார். 24 ன் முக்கியத்துவம் என்ன என்று இப்போது பார்க்கலாம். அன்னை அபிராமியின் மந்திரங்களில் மிக முக்கியமானது 'லலிதா சஹஸ்ரநாமம்' ஆகும். இந்த பூஜையில் மிகவும் போற்றத்தக்கதாக விளங்குவது 'சுஹாசினி பூஜை.' இதன் அடிப்படையில்தான், வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவை வழங்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் இருபத்து நான்கு பரிகார மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதன் பலன்களை கீழே பார்க்கலாம். 1 . காரிய சித்தி, 2 . நியாயமான ஆசைகள் நிறைவேற, 3 . நோயிலிருந்து விடுதலை, 4 . மாங்கல்யபலம், 5 . சிறந்த கல்வி, 6 . பூர்வ ஜென்ம கர்மாவிலிருந்து விடுதலை, 7 . இறை பக்தி, 8 . பயம் நீங்க, 9 . நிறை செல்வம், 10 . குடும்ப அமைதி, 11 . தீயவை அழிய, 12 . கோபம் நீங்க, 13 . அகால மரணம் ஏற்படாமலிருக்க, 14 . துன்பங்கள் நீங்க, 15 . சுக வாழ்வு பெற, 16 . கண் திருஷ்டி நீங்க, 17 . சுபமங்களங்கள் உண்டாக, 18 . ஆன்மீக வளர்ச்சி, 19 . உடல் வலிமை, 20 . தொழில் வளர்ச்சி, 21 . வழக்குகள் ஈடே...