கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-5)
அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான சில காரணங்களை பார்த்தோம். இப்போது திருமணத்தை அமிர்தகடேஸ்வர ர் கோவிலில் நடத்த காரணங்களை பற்றி பார்ப்போம். நம் இதிகாச புராணங்களில், மார்கண்டேயர் என்ற ஒரு மகரிஷியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நடிகர் சிவகுமாருக்கு கூட ‘கலையுலக மார்க்கண்டேயன்’ என்ற ஒரு பெயர் உண்டு. எந்த வயதிலும் இவர் இளமையாக தோன்றியதால் அவரை அப்படி அழைப்பார்கள். அந்த பெயருக்கு நிஜமான சொந்தக்கார ர் இந்த மகரிஷிதான். ஆமாம். தனது பதினாறாவது வயதில் இவர் மரணம் ஏறபடும் என்பது தான் இவர் விதி. ஆனால் இந்த மார்க்கண்டேயரோ, மிகச்சிறந்த சிவ பக்தர். தனது பதினாறாவது வயதில் சிவ பக்தியின் உச்சத்தில் இவர் தியானத்தில் இருந்தபோது, காலத்தின் தலைவனான ‘எமதர்மராஜன்’ இவர் உயிர் பறிக்க வந்தார். அப்போது பரமசிவன் தோன்றி எமதர்மராஜனோடு போரிட்டு வீழ்த்திவிடுகிறார். பின்னர் எமதர்மராஜனுக்கு மன்னிப்பு வழங்கி மீட்டு எடுத்ததாக இந்த தலத்தில் சொல்லப்படுகிறது. அன்று முதல் மார்க்கண்டேய மகரிஷிக்கு மரணம் கடந்த உயர்ந்த நிலை கிடைக்கிறது. ஆதலால், இந்த தலத்தில் நிகழ்த்தப்படும் மகா ம்ருத்யுஞ்சய பூஜை, மிகவும் சிறப்பானது. நமத...