கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-8 )
'கஜ, கோ, ஹய' பூஜைகளை தொடர்ந்து முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யும் முன்பு 'சங்கல்பம்' எனப்படுகிற உறுதியேற்றல் அவசியம். சங்கல்பம் செய்யும்போது செய்பவருக்கும், ஏற்பவருக்கும் (இந்த இடத்தில் அந்த பூஜைக்கான கடவுள் என்று பொருள்) ஒரு தொடர்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சங்கல்பத்தின் போது, நாம் யார், எந்த பகுதி, என்ன கோத்திரம், நட்சத்திரம் என்ற பூர்வாங்கமெல்லாம் சொல்லி பூஜையின் நோக்கத்தை கூறி விட்டு தொடரவேண்டும். முதலில் கணபதி பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ருத்திரம், சமகம் போன்ற மிக உயர்ந்த மந்திர பிரயோகங்கள்நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு ருத்ர ஏகாதசி என்று பெயர். இந்த மந்திரங்கள் 'கிருஷ்ண யஜுர்' வேதத்தில் உள்ளன. அதன்படி, பதினோரு ருத்திரர்கள் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 'கபாலி, பிங்களர், பீமர், விருபாக்ஷர், விலோஹிதர், சாஸ்திரர், அஜபாதர், அஹிர்பூதன்யர், ஷாம்போ, சாந்தர், பாவர்'. இந்த பெயர்கள் சிவபுராணத்தின் படியாகும். மற்ற புராணங்களில் வேறு பெயர்கள் இருந்தால் நான் பொறுப்பில்லை. இந்த பூஜைகள் யாவும், ஒருவர் அறுபது வயதை கடந்து, அதாவது குடும்...