Posts

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-8 )

Image
'கஜ, கோ, ஹய' பூஜைகளை தொடர்ந்து முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யும் முன்பு 'சங்கல்பம்' எனப்படுகிற உறுதியேற்றல் அவசியம். சங்கல்பம் செய்யும்போது செய்பவருக்கும், ஏற்பவருக்கும் (இந்த இடத்தில் அந்த பூஜைக்கான கடவுள் என்று பொருள்) ஒரு தொடர்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சங்கல்பத்தின் போது, நாம் யார், எந்த பகுதி, என்ன கோத்திரம், நட்சத்திரம் என்ற பூர்வாங்கமெல்லாம் சொல்லி பூஜையின் நோக்கத்தை கூறி விட்டு தொடரவேண்டும்.  முதலில் கணபதி பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ருத்திரம், சமகம் போன்ற மிக உயர்ந்த மந்திர பிரயோகங்கள்நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு ருத்ர ஏகாதசி என்று பெயர். இந்த மந்திரங்கள் 'கிருஷ்ண யஜுர்' வேதத்தில் உள்ளன. அதன்படி, பதினோரு ருத்திரர்கள் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 'கபாலி, பிங்களர், பீமர், விருபாக்ஷர், விலோஹிதர், சாஸ்திரர், அஜபாதர், அஹிர்பூதன்யர், ஷாம்போ, சாந்தர், பாவர்'. இந்த பெயர்கள் சிவபுராணத்தின் படியாகும். மற்ற புராணங்களில் வேறு பெயர்கள் இருந்தால் நான் பொறுப்பில்லை. இந்த பூஜைகள் யாவும், ஒருவர் அறுபது வயதை கடந்து, அதாவது குடும்...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-7 )

Image
 ஷஷ்டி அப்த பூர்த்தி சடங்குகளில் முதலில் வருவது, இறையருளை பெறுவதற்கான சில பூஜைகள். முதலில் 'கஜ பூஜை' அதாவது விநாயக பெருமானின் வடிவமாக திகழும் யானைக்கு பூஜை செய்வது. கஜ வடிவம் என்பது பலம், அறிவாற்றல், மதிப்பு மற்றும் மரியாதையின் உருவமாகும். கஜபூஜையின் மூலமாக, விநாயகரை வழிபாட்டு தடைகள் நீங்கப்பெற்று இந்த நான்கு பேறுகளையும் பெறுவதுதான் இதன் அடிப்படை நோக்கம். இரண்டாவது 'கோ' பூஜை. அதாவது பசுவை பூஜிப்பது. பசு, மஹாலக்ஷ்மி தாயாரின் அம்சமாக நம் சம்பிரதாயத்தில் வழிபட படுகிறது. 'காமதேனு'வின் அம்சமாகவும் கொள்ளலாம். இந்த வழிபாட்டின்  மூலம் நீங்காத செல்வத்தையும், பூர்வ கர்மங்களை களைந்து புண்ணியங்களை பெறலாம். மூன்றாவது 'ஹய பூஜை'. ஹயம் என்றால் குதிரை. குதிரை வேகம், அழகு, ஆன்மீக அறிவு முதலியவற்றின் அடையாளம். இந்த பூஜையின் மூலம் இந்த மூன்று பயன்களையும் பெறுவது தான் நோக்கம். அறுபது வயதுக்கு மேலே இதெல்லாம் தேவையா? என்று கேட்காதீர்கள். நிச்சயமாக தேவை. இந்த முக்கியமான மூன்று பூஜைகளும் செய்தால்தான், முழுமையான தயார் நிலை ஏற்படும் என்பது நியதி. திருக்கடையூரில் இவை மூன்றையும் நிய...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்- 6)

Image
திருக்கடையூரில், அமிர்தகடேஸ்வர்ருக்கு சம மாக அபிராமி அம்பாளுக்கும் சிறப்பான வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் அபிராமி பட்டர் என்ற ஒரு பக்தர் இருந்தார். அபிராமி அன்னையின் தீவிர பக்தர். அவர் ஒரு பண்டிதரும் கூட. நற்செயல் எதுவாக இருந்தாலும், நாள் குறித்து தர இவரைதான் கேட்பார்கள். அப்படி ஒரு நாள், பட்டர் தீவிர பக்தி உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த பகுதி அரசர் இவரை “பௌர்ணமி என்றைக்கு?” என்று கேட்க, பட்டர் கவனமில்லாமல் தை அமாவாசை தினத்தை குறித்து கொடுக்க, வந்தது வினை (அரசர் ஒரு காலண்டரை அரண்மனையில் மாட்டியிருக்கலாம்) கடுப்பாகிப்போன மன்னர் அபிராமி பட்டரை சுற்றிலும் தீயை மூட்டி, நடுவே நிற்க வைத்து, பௌர்ணமி தினத்தை உறுதி படுத்த சொல்கிறார். பாவம், பட்டர் என்ன செய்வார்? “ சொல்லடி அபிராமி…..” என்று பாட்டு பாடுகிறார். பக்தரை, தாய் கை விடுவாரா? உடனே, தன் காதிலிருந்த ஒரு வைரத்தோடை பிடுங்கி வானத்தை நோக்கி தூக்கி எறிய. அந்த தோடு முழு நிலவாக மாறுகிறது. தன் தவற்றை அரசர் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இந்த வரலாறும் இங்கு உள்ளது. அபிராமி பட்டருக்கு ஒரு சன்னதி இங்கு உள்ளது. மீண்டும் நம் கதைக்கு வருவோம். மு...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-5)

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான சில காரணங்களை பார்த்தோம். இப்போது திருமணத்தை அமிர்தகடேஸ்வர ர் கோவிலில் நடத்த காரணங்களை பற்றி பார்ப்போம்.  நம் இதிகாச புராணங்களில், மார்கண்டேயர் என்ற ஒரு மகரிஷியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நடிகர் சிவகுமாருக்கு கூட ‘கலையுலக மார்க்கண்டேயன்’ என்ற ஒரு பெயர் உண்டு. எந்த வயதிலும் இவர் இளமையாக தோன்றியதால் அவரை அப்படி அழைப்பார்கள். அந்த பெயருக்கு நிஜமான சொந்தக்கார ர் இந்த மகரிஷிதான்.  ஆமாம். தனது பதினாறாவது வயதில் இவர் மரணம் ஏறபடும் என்பது தான் இவர் விதி. ஆனால் இந்த மார்க்கண்டேயரோ, மிகச்சிறந்த சிவ பக்தர். தனது பதினாறாவது வயதில் சிவ பக்தியின் உச்சத்தில் இவர் தியானத்தில் இருந்தபோது, காலத்தின் தலைவனான ‘எமதர்மராஜன்’ இவர் உயிர் பறிக்க வந்தார். அப்போது பரமசிவன் தோன்றி எமதர்மராஜனோடு போரிட்டு வீழ்த்திவிடுகிறார். பின்னர் எமதர்மராஜனுக்கு மன்னிப்பு வழங்கி மீட்டு எடுத்ததாக இந்த தலத்தில் சொல்லப்படுகிறது. அன்று முதல் மார்க்கண்டேய மகரிஷிக்கு மரணம் கடந்த உயர்ந்த நிலை கிடைக்கிறது.  ஆதலால், இந்த தலத்தில் நிகழ்த்தப்படும் மகா ம்ருத்யுஞ்சய பூஜை, மிகவும் சிறப்பானது. நமத...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-4)

Image
அறுபதாம் கல்யாணத்துக்கு நான்காவது முக்கிய காரணம், முதல் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு இல்வாழ்க்கையில் வெற்றிகரமாக பயணம் செய்து, மீண்டும் திருமணம் செய்து, அனேகமாக அதே சடங்குகளை நிகழ்த்தி பார்க்கும் போது மனதில் தோன்றும் உணர்வுகள் ஏராளம். அந்த உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் தான் இந்த திருமணம் நடைபெறுகின்றன.  இந்த திருமணத்தின் போது, பல வகையான ஹோமங்கள் நடக்கும். இவை அனைத்தும் “பிராயச்சித்த கர்மா” என்று அழைக்கப்படும் பிறவிக்கடன்களை (இதற்கு வட்டி எல்லாம் கிடையாது) தீர்த்து நம்மை ஆன்மீக வழியில் முன்னேற செய்யுமென்று நம்பப்படுகிறது.  எனது அத்தை மகன் வெங்கியுடன் பேசி, ‘இரண்டு காலம்’ என்று முடிவு செய்து விட்டேன். பிறகு என்ன? மற்ற வேலைகளை துவங்க வேண்டியதுதான் பாக்கி. நானும், என் மனைவியும் வெங்கியுடன் திருக்கடையூர் சென்றோம். முதலில் ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு பிறகு அறுபதாம் கல்யாணத்தை செய்து தர, ஏற்கனவே பேசி வைத்திருந்த ஒரு வைதீக வித்தகர் ஒருவரை சந்தித்தோம். அமிர்தகடேஸ்வர ர் ஆலயத்தின் சுற்றி உள்ள வீதிகள் அனைத்திலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி தர ஏராளமான குழுக்கள் இருக்கின...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-3)

அறுபதாம் கல்யாணத்துக்கு மூன்றாவது முக்கிய காரணம், என்னவென்றால் ஒரு மனிதன், கிருஹ நிலையை கடந்து ‘வனப்பிரஸ்த்தம்’ என்கிற ஆன்மீக நிலையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவது தான். இது வரை குடும்ப வாழ்க்கையில் உழன்று, குழந்தை, பள்ளி படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பேறு என்று பல பருவங்களை கடந்து, முதல் முறையாக ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு, முழுமையை அடைய முயலவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்ச்சி. மேலும் சில காரணங்களை அடுத்தடுத்து பார்க்கலாம். “அண்ணா, நான் இப்போ திருக்கடையூர்ல இருக்கேன். உங்களுக்கும், அக்காக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு உங்க பசங்களும் நாங்களும் முடிவு பண்ணிட்டோம். ஜூலை மாசம் ஏழாம் தேதி.” ‘எதே, அப்போ பாகம்-1 ல அம்மா நாள் பார்த்தது, நான் வெட்க பட்டது, எல்லாம் “உவ்வே”தானா?’ எனக்கு கொஞ்சம் மண்டை காய்ந்தது. இருந்தாலும்  அதை வெளியே காட்டிக்கொள்ள மனமில்லை. “என்னடா இது திடீர்னு, அறுபது, எழுபது னு உளறர… எப்ப இதெல்லாம் முடிவு பண்ணீங்க?” என்று கேட்டேன். “அண்ணா…., இதெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொ...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-2 )

Image
சரி, அது என்ன அறுபதாம் கல்யாணம்? நாற்பது, ஐம்பது இந்த வயதுக்கெல்லாம் கல்யாணம் வேண்டாமா?  "உக்கும்...சில பேருக்கு நாற்பது வயதில்தான் முதல் கல்யாணமே நடக்கிறது..." என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. அறுபதுக்கு ஒரு சில முக்கியத்துவத்துவங்கள் இருக்கின்றன. ஒன்று ஒன்றாக பார்ப்போம். நமது தென்னிந்திய கணக்கின்படி, ஒரு மனிதனின் முழு ஆயுள் என்பது நூற்று இருபதாம்.  "கிழிஞ்சிது, போங்க....அறுபதுக்குள்ளேயே, ஆஞ்சியோ, டயாலிசிஸ், சர்க்கரை, உப்பு, புளி என்று நெருக்கடிகள் தாங்க முடியல... இதுல நூற்று இருப்பதா. ஆள உடுறா சாமி" என்கிறீர்களா. கவலையை விடுங்க, இந்த காலத்துக்கு அது செல்லாது. அறுபதாம் கல்யாணத்தின் முக்கியத்துவத்தை சொல்லத்தான் இந்த கணக்கு. நூற்று இருபதில் பாதி அறுபது அல்லவா? அறுபது வயதை கடந்தால், ஆயுளில் பாதியை வெற்றிகரமாக (சிரிக்காதீர்கள்) கடந்துவிட்டதை அறிவிப்பது ஒரு காரணம். மீதி பாதியை நல்லபடியாக கடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும், நற்செயல்களில் ஈடுபடுவதும் மிக முக்கியம். இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ் வருடங்களின் மொத்த எண்ணிக்கை அறுபது. 'பிரபவ' வருடத்தில்...