கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-4 )
பபெரா ஓட்டலில் காலை உணவு மட்டும் இலவசம் (காம்ப்ளிமென்ட்டரி), ஆதலால் முதல் நாள் இரவு சிற்றுண்டியை பபேராவிலேயே, ஒரு மணிநேர காத்திருப்புக்கு பின் உண்டு களித்தோம். நேபாள் உணவு முறையில் நிறைய 'தாய்' ஐட்டங்கள் இருக்கிறது. எல்லாவிதமான 'மோ-மோ' வும் கிடைக்கிறது. இனிப்பு வெஜ் ரைஸ் (அநேகமாக காஷ்மீரி வகை), சப்பாத்தியும், தோசையும் சர்வதேச உணவாகிவிட்டதால் எங்கும் கிடைக்கும். ஹோட்டலில் மேல் தளத்தில் உள்ள டைனிங் ஹால் என்பதால், மலைத்தொடர்களை ரசித்துக்கொண்டே இயற்கை காற்றையும் வாங்கிக்கொண்டே சாப்பிட முடிந்தது. இதெல்லாம் நம்ம ஊரில் முடியுமா? செயற்கை குளிரூட்டப்பட்ட அறை, அல்லது மாசுபட்ட காற்றுடன் கூடிய வெளி சூழல் என்றே பழகிவிட்டோம் இல்லையா? வருடத்துக்கு ஒரு முறையாவது இது போன்ற இடங்களுக்கு சென்று இயற்கையை ரசிக்க வேண்டும் என்று உறுதி மேற்கொண்டேன். இமய மலைப்பகுதியாதலால், இருள் சூழ எட்டு மணியாகிறது. அதே போலவே காலை பொழுதும் சீக்கிரமே விடிந்து விடுகிறது. முதல் நாள் தூக்கமின்மையால், அன்று இரவு அருமையான தூக்கம் சொக்கியது. காலைபொழுதும் சீக்கிரமே வந்து விட, இரண்டாம் நாள் பயணத்துக்கு தேவையானவற்றை அள்...