கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்- 6)
திருக்கடையூரில், அமிர்தகடேஸ்வர்ருக்கு சம மாக அபிராமி அம்பாளுக்கும் சிறப்பான வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் அபிராமி பட்டர் என்ற ஒரு பக்தர் இருந்தார். அபிராமி அன்னையின் தீவிர பக்தர். அவர் ஒரு பண்டிதரும் கூட. நற்செயல் எதுவாக இருந்தாலும், நாள் குறித்து தர இவரைதான் கேட்பார்கள். அப்படி ஒரு நாள், பட்டர் தீவிர பக்தி உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த பகுதி அரசர் இவரை “பௌர்ணமி என்றைக்கு?” என்று கேட்க, பட்டர் கவனமில்லாமல் தை அமாவாசை தினத்தை குறித்து கொடுக்க, வந்தது வினை (அரசர் ஒரு காலண்டரை அரண்மனையில் மாட்டியிருக்கலாம்) கடுப்பாகிப்போன மன்னர் அபிராமி பட்டரை சுற்றிலும் தீயை மூட்டி, நடுவே நிற்க வைத்து, பௌர்ணமி தினத்தை உறுதி படுத்த சொல்கிறார். பாவம், பட்டர் என்ன செய்வார்? “ சொல்லடி அபிராமி…..” என்று பாட்டு பாடுகிறார். பக்தரை, தாய் கை விடுவாரா? உடனே, தன் காதிலிருந்த ஒரு வைரத்தோடை பிடுங்கி வானத்தை நோக்கி தூக்கி எறிய. அந்த தோடு முழு நிலவாக மாறுகிறது. தன் தவற்றை அரசர் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இந்த வரலாறும் இங்கு உள்ளது. அபிராமி பட்டருக்கு ஒரு சன்னதி இங்கு உள்ளது. மீண்டும் நம் கதைக்கு வருவோம். மு...