கடவூர் டு காத்மாண்டு! (பாகம்-7)
நேற்றைய தினம் நேபாளத்தில் நிகழ்ந்த அந்த துயரமான இயற்கை பேரழிவு சம்பவம் எனது நெஞ்சத்தை உலுக்கியது. இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஏன் இந்த தேசத்திற்கு மட்டும் இவ்வளவு சோக நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன? என்ற கேள்வியோடு இந்த தொடர் கட்டுரையை எழுதுகிறேன். நாங்கள் அடுத்து பயணம் செய்த இடம், ஸ்வயம்பு மகாசைத்யா. காத்மாண்டு பள்ளத்தாக்கின் பரந்த காட்சியைத் தழுவியபடி, மரங்கள் அடர்ந்த குன்றின் உச்சியில் “ஸ்வயம்பு மகாசைத்யா” அமைதியாக எழுந்து நிற்கிறது. நேபாள மக்கள் அன்புடன் “குரங்கு கோயில்” என்று அழைக்கும் இத்தலம், வரலாற்றுச் சின்னம் மட்டுமல்ல; புராணமும் பக்தியும் உயிரோடு நடமாடும் புனிதமான இடம். உச்சியை நோக்கி ஏறத் தொடங்கும்போது, 365 கல் படிக்கட்டுகள் நம்மை வரவேற்கின்றன. ஆண்டின் ஒவ்வொரு நாளையும் குறிக்கும் இந்தப் படிகள், உடலை மட்டுமல்ல, மனதையும் மெதுவாக உயர்த்துகின்றன. வழியெங்கும் வண்ணமயமான பிரார்த்தனைக் கொடிகள் காற்றில் படபடக்க, பழமையான கல் சிற்பங்கள் காலத்தின் கதைகளைச் சொல்கின்றன. இடையிடையே தோன்றும் குறும்புக்கார ‘ரீசஸ்’ என்ற குரங்குகள் சுற்றித் திரிகின்றன “...