கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-3)
அறுபதாம் கல்யாணத்துக்கு மூன்றாவது முக்கிய காரணம், என்னவென்றால் ஒரு மனிதன், கிருஹ நிலையை கடந்து ‘வனப்பிரஸ்த்தம்’ என்கிற ஆன்மீக நிலையில் பயணம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துவது தான். இது வரை குடும்ப வாழ்க்கையில் உழன்று, குழந்தை, பள்ளி படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பேறு என்று பல பருவங்களை கடந்து, முதல் முறையாக ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு, முழுமையை அடைய முயலவேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த நிகழ்ச்சி. மேலும் சில காரணங்களை அடுத்தடுத்து பார்க்கலாம். “அண்ணா, நான் இப்போ திருக்கடையூர்ல இருக்கேன். உங்களுக்கும், அக்காக்கும் அறுபதாம் கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு உங்க பசங்களும் நாங்களும் முடிவு பண்ணிட்டோம். ஜூலை மாசம் ஏழாம் தேதி.” ‘எதே, அப்போ பாகம்-1 ல அம்மா நாள் பார்த்தது, நான் வெட்க பட்டது, எல்லாம் “உவ்வே”தானா?’ எனக்கு கொஞ்சம் மண்டை காய்ந்தது. இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மனமில்லை. “என்னடா இது திடீர்னு, அறுபது, எழுபது னு உளறர… எப்ப இதெல்லாம் முடிவு பண்ணீங்க?” என்று கேட்டேன். “அண்ணா…., இதெல்லாம் ஒரு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணிட்டோம். இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொ...