கடவூர் டூ காத்மாண்டு!! (பாகம்-6)
பௌத்தநாத் கோவில் சுற்றி உள்ள கடைகளில் ஒன்றில் நேபாளி தொப்பி ஒன்றை இரு நூறு ரூபாய்க்கு வாங்கி, கொடுப்பதற்கு பணம் இல்லாமல் தவித்து பின்னர், ATM தேடி அலைந்து ஒரு வழியாக பணத்தை எடுத்து கொடுத்து விட்டு “போதுமடா சாமி” என்று ஆகிவிட்டது. அடுத்து நாங்கள் சென்ற இடமும் மிகப்பிரபலமானது. அதன் பெயர் படான் தர்பார் சதுக்கம். படான் தர்பார் சதுக்கம், யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரியத் தலமாகவும், நேவாரி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த படைப்பாகவும் திகழ்கிறது. நேபாளத்தின் லலித்பூரில் அமைந்துள்ள இது, மல்ல வம்ச காலத்தில் கட்டப்பட்ட பழமையான அரச முற்றங்கள், புனிதமான இந்து மற்றும் பௌத்த ஆலயங்கள் மற்றும் 16 முதல் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நேர்த்தியான கல், மரம் மற்றும் உலோகச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. இதன் அனேக விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நமக்கு நிச்சயமாக ஒரு உள்ளூர் வழிகாட்டி தேவை. அதற்கு அலைய தேவையில்லை. கட்டணம் வசூலிக்கப்படும் இடத்தில் அரசு அனுமதி பெற்ற ஆங்கிலம் பேசும் ‘கெய்டு’கள் இருக்கிறார்கள். இரண்டாயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். மூன்று மணி நேரத்தில் முழுவதும் சுற்றி காட்டி வி...