Posts

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-11 )

Image
 என் நண்பர், தம் உறவினர் ஒருவரின் ஷஷ்டி பூர்த்தியில், இருபத்து நாலு கலசங்கள் பார்த்ததாக கமெண்ட்டில் கூறியிருந்தார். 24 ன் முக்கியத்துவம் என்ன என்று இப்போது பார்க்கலாம். அன்னை அபிராமியின் மந்திரங்களில் மிக முக்கியமானது 'லலிதா சஹஸ்ரநாமம்' ஆகும். இந்த பூஜையில் மிகவும் போற்றத்தக்கதாக விளங்குவது 'சுஹாசினி பூஜை.' இதன் அடிப்படையில்தான், வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம் போன்றவை வழங்கப்படுகிறது. லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் இருபத்து நான்கு பரிகார மந்திரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதன் பலன்களை கீழே பார்க்கலாம். 1 . காரிய சித்தி, 2 . நியாயமான ஆசைகள் நிறைவேற, 3 . நோயிலிருந்து விடுதலை, 4 . மாங்கல்யபலம், 5 . சிறந்த கல்வி, 6 . பூர்வ ஜென்ம கர்மாவிலிருந்து விடுதலை, 7 . இறை பக்தி, 8 . பயம் நீங்க, 9 . நிறை செல்வம், 10 . குடும்ப அமைதி, 11 . தீயவை அழிய, 12 . கோபம் நீங்க, 13 . அகால மரணம் ஏற்படாமலிருக்க, 14 . துன்பங்கள் நீங்க, 15 . சுக வாழ்வு பெற, 16 . கண் திருஷ்டி நீங்க, 17 . சுபமங்களங்கள் உண்டாக, 18 . ஆன்மீக வளர்ச்சி, 19 . உடல் வலிமை, 20 . தொழில் வளர்ச்சி, 21 . வழக்குகள் ஈடே...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-10 )

Image
 ஷஷ்டி அப்தபூர்த்தியின் போது, எதற்காக பதினாறு கலசங்கள் வைக்கப்படுகிறது? என்று கேட்டிருந்தேன் அல்லவா? இப்போது பதிலை பார்ப்போம். 16 கலசங்களில், ஒவ்வொரு கலசமும் ஒரு தெய்வத்தை அல்லது தேவதையை குறிப்பது. ஒவ்வொரு கலசத்திலும் பின்வரும் தெய்வத்தை, மந்திரங்களின் மூலம் ஆவாஹனம் செய்கிறார்கள்.  1. பிரம்மன் (படைத்தல்), 2. விஷ்ணு (காத்தல்), 3. சிவன் (அழித்தல்), 4. லட்சுமி (செல்வம்), 5. சரஸ்வதி (கல்வி), 6. பார்வதி (சக்தி), திக்தேவதைகளாகிய 7. இந்திரன் (கிழக்கு), 8. அக்னி (தென்கிழக்கு), 9. யமன் (தெற்கு), 10. நிருதி (தென்மேற்கு), 11. வருணன் (மேற்கு), 12. வாயு (வடமேற்கு), 13. குபேரன் (வடக்கு), 14. ஈசானன் (வடகிழக்கு) மற்றும் ஆயுள், ஆரோக்கிய தேவதைகளாகிய 15. தன்வந்தரி (ஆரோக்கியம்), 16. ஆயுள் தேவதை (நீண்ட ஆயுள்) இதைத்தவிர, இன்னுமொரு காரணமும் இருக்கிறது. இந்த பூஜைகளில், மிக உயர்ந்த பொருளை கொண்ட சூக்தங்களான, ஸ்ரீசுக்தம், புருஷ சூக்தம், ருத்ரம், ஆயுஷ்ய சூக்தம் போன்றவை மந்திரங்களின் மூலம், கலச தீர்த்தத்தில் உயிரேற்றப்பட்டு, முடிவில் அந்த தீர்த்தங்களை கொண்டு தம்பதிகளுக்கு அபிஷேகமும், மற்றும் ஏனையருக்கு தீ...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-9 )

Image
'ருத்ர ஏகாதசி' பூஜைகளை தொடர்ந்து 'மரகத லிங்க அபிஷேகம்' நடந்தது. அது பற்றி இன்று தெரிந்து கொள்வோம். மரகதம், ஆங்கிலத்தில் 'எமரால்டு' என்று சொல்லுவார்கள். இயற்கையில் பச்சை நிறமுடையது. மரகத லிங்கம் என்பதும் பச்சை நிறமுடையது. மிகவும் அரிதானது இந்த மரகத லிங்கம்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் 'உத்திரகோச மங்கை' என்று ஒரு மிக பழைமையான சிவாலயம் ஒன்று உள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் 'மரகத நடராஜர்' சன்னதி உள்ளது. வருடம் முழுவதும் சந்தனக்காப்பிலேயே தான் நடராஜர் காட்சி அளிப்பார். ஒரு நாள் தவிர, ஆம். ஆருத்திரா தரிசனத்தின் போது மட்டும், மரகத நடராஜரை தரிசிக்கலாம், பச்சை நிறத்தில். மிகவும் சிறப்பு மிக்க ஆலயம். இப்போது மரகத லிங்க அபிஷேகத்தை பற்றி மேலும் சில விபரங்களை தெரிந்து கொள்ளலாம். சிவபெருமானுக்கு 'அபிஷேகப்பிரியர்' என்று ஒரு பெயர் உண்டு. அதிலும், தேன், சந்தனம், மஞ்சள், புஷ்பம், விபூதி, பஞ்சமிருதம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது, நமக்கு வரங்களை அள்ளிக்கொடுப்பார் அல்லவா! லிங்கத்திலிருந...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-8 )

Image
'கஜ, கோ, ஹய' பூஜைகளை தொடர்ந்து முக்கிய பூஜைகள், ஹோமங்கள் செய்யும் முன்பு 'சங்கல்பம்' எனப்படுகிற உறுதியேற்றல் அவசியம். சங்கல்பம் செய்யும்போது செய்பவருக்கும், ஏற்பவருக்கும் (இந்த இடத்தில் அந்த பூஜைக்கான கடவுள் என்று பொருள்) ஒரு தொடர்பு ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இந்த சங்கல்பத்தின் போது, நாம் யார், எந்த பகுதி, என்ன கோத்திரம், நட்சத்திரம் என்ற பூர்வாங்கமெல்லாம் சொல்லி பூஜையின் நோக்கத்தை கூறி விட்டு தொடரவேண்டும்.  முதலில் கணபதி பூஜையோடு ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து ருத்திரம், சமகம் போன்ற மிக உயர்ந்த மந்திர பிரயோகங்கள்நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு ருத்ர ஏகாதசி என்று பெயர். இந்த மந்திரங்கள் 'கிருஷ்ண யஜுர்' வேதத்தில் உள்ளன. அதன்படி, பதினோரு ருத்திரர்கள் உள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 'கபாலி, பிங்களர், பீமர், விருபாக்ஷர், விலோஹிதர், சாஸ்திரர், அஜபாதர், அஹிர்பூதன்யர், ஷாம்போ, சாந்தர், பாவர்'. இந்த பெயர்கள் சிவபுராணத்தின் படியாகும். மற்ற புராணங்களில் வேறு பெயர்கள் இருந்தால் நான் பொறுப்பில்லை. இந்த பூஜைகள் யாவும், ஒருவர் அறுபது வயதை கடந்து, அதாவது குடும்...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-7 )

Image
 ஷஷ்டி அப்த பூர்த்தி சடங்குகளில் முதலில் வருவது, இறையருளை பெறுவதற்கான சில பூஜைகள். முதலில் 'கஜ பூஜை' அதாவது விநாயக பெருமானின் வடிவமாக திகழும் யானைக்கு பூஜை செய்வது. கஜ வடிவம் என்பது பலம், அறிவாற்றல், மதிப்பு மற்றும் மரியாதையின் உருவமாகும். கஜபூஜையின் மூலமாக, விநாயகரை வழிபாட்டு தடைகள் நீங்கப்பெற்று இந்த நான்கு பேறுகளையும் பெறுவதுதான் இதன் அடிப்படை நோக்கம். இரண்டாவது 'கோ' பூஜை. அதாவது பசுவை பூஜிப்பது. பசு, மஹாலக்ஷ்மி தாயாரின் அம்சமாக நம் சம்பிரதாயத்தில் வழிபட படுகிறது. 'காமதேனு'வின் அம்சமாகவும் கொள்ளலாம். இந்த வழிபாட்டின்  மூலம் நீங்காத செல்வத்தையும், பூர்வ கர்மங்களை களைந்து புண்ணியங்களை பெறலாம். மூன்றாவது 'ஹய பூஜை'. ஹயம் என்றால் குதிரை. குதிரை வேகம், அழகு, ஆன்மீக அறிவு முதலியவற்றின் அடையாளம். இந்த பூஜையின் மூலம் இந்த மூன்று பயன்களையும் பெறுவது தான் நோக்கம். அறுபது வயதுக்கு மேலே இதெல்லாம் தேவையா? என்று கேட்காதீர்கள். நிச்சயமாக தேவை. இந்த முக்கியமான மூன்று பூஜைகளும் செய்தால்தான், முழுமையான தயார் நிலை ஏற்படும் என்பது நியதி. திருக்கடையூரில் இவை மூன்றையும் நிய...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்- 6)

Image
திருக்கடையூரில், அமிர்தகடேஸ்வர்ருக்கு சம மாக அபிராமி அம்பாளுக்கும் சிறப்பான வரலாறு உள்ளது. முன்னொரு காலத்தில் அபிராமி பட்டர் என்ற ஒரு பக்தர் இருந்தார். அபிராமி அன்னையின் தீவிர பக்தர். அவர் ஒரு பண்டிதரும் கூட. நற்செயல் எதுவாக இருந்தாலும், நாள் குறித்து தர இவரைதான் கேட்பார்கள். அப்படி ஒரு நாள், பட்டர் தீவிர பக்தி உச்சத்தில் இருந்த சமயத்தில், அந்த பகுதி அரசர் இவரை “பௌர்ணமி என்றைக்கு?” என்று கேட்க, பட்டர் கவனமில்லாமல் தை அமாவாசை தினத்தை குறித்து கொடுக்க, வந்தது வினை (அரசர் ஒரு காலண்டரை அரண்மனையில் மாட்டியிருக்கலாம்) கடுப்பாகிப்போன மன்னர் அபிராமி பட்டரை சுற்றிலும் தீயை மூட்டி, நடுவே நிற்க வைத்து, பௌர்ணமி தினத்தை உறுதி படுத்த சொல்கிறார். பாவம், பட்டர் என்ன செய்வார்? “ சொல்லடி அபிராமி…..” என்று பாட்டு பாடுகிறார். பக்தரை, தாய் கை விடுவாரா? உடனே, தன் காதிலிருந்த ஒரு வைரத்தோடை பிடுங்கி வானத்தை நோக்கி தூக்கி எறிய. அந்த தோடு முழு நிலவாக மாறுகிறது. தன் தவற்றை அரசர் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார். இந்த வரலாறும் இங்கு உள்ளது. அபிராமி பட்டருக்கு ஒரு சன்னதி இங்கு உள்ளது. மீண்டும் நம் கதைக்கு வருவோம். மு...

கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-5)

அறுபதாம் கல்யாணம் செய்வதற்கான சில காரணங்களை பார்த்தோம். இப்போது திருமணத்தை அமிர்தகடேஸ்வர ர் கோவிலில் நடத்த காரணங்களை பற்றி பார்ப்போம்.  நம் இதிகாச புராணங்களில், மார்கண்டேயர் என்ற ஒரு மகரிஷியை பற்றி கேள்விப்பட்டிருப்போம். நடிகர் சிவகுமாருக்கு கூட ‘கலையுலக மார்க்கண்டேயன்’ என்ற ஒரு பெயர் உண்டு. எந்த வயதிலும் இவர் இளமையாக தோன்றியதால் அவரை அப்படி அழைப்பார்கள். அந்த பெயருக்கு நிஜமான சொந்தக்கார ர் இந்த மகரிஷிதான்.  ஆமாம். தனது பதினாறாவது வயதில் இவர் மரணம் ஏறபடும் என்பது தான் இவர் விதி. ஆனால் இந்த மார்க்கண்டேயரோ, மிகச்சிறந்த சிவ பக்தர். தனது பதினாறாவது வயதில் சிவ பக்தியின் உச்சத்தில் இவர் தியானத்தில் இருந்தபோது, காலத்தின் தலைவனான ‘எமதர்மராஜன்’ இவர் உயிர் பறிக்க வந்தார். அப்போது பரமசிவன் தோன்றி எமதர்மராஜனோடு போரிட்டு வீழ்த்திவிடுகிறார். பின்னர் எமதர்மராஜனுக்கு மன்னிப்பு வழங்கி மீட்டு எடுத்ததாக இந்த தலத்தில் சொல்லப்படுகிறது. அன்று முதல் மார்க்கண்டேய மகரிஷிக்கு மரணம் கடந்த உயர்ந்த நிலை கிடைக்கிறது.  ஆதலால், இந்த தலத்தில் நிகழ்த்தப்படும் மகா ம்ருத்யுஞ்சய பூஜை, மிகவும் சிறப்பானது. நமத...