கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (பாகம்-2 )
சரி, அது என்ன அறுபதாம் கல்யாணம்? நாற்பது, ஐம்பது இந்த வயதுக்கெல்லாம் கல்யாணம் வேண்டாமா? "உக்கும்...சில பேருக்கு நாற்பது வயதில்தான் முதல் கல்யாணமே நடக்கிறது..." என்று நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது. அறுபதுக்கு ஒரு சில முக்கியத்துவத்துவங்கள் இருக்கின்றன. ஒன்று ஒன்றாக பார்ப்போம். நமது தென்னிந்திய கணக்கின்படி, ஒரு மனிதனின் முழு ஆயுள் என்பது நூற்று இருபதாம். "கிழிஞ்சிது, போங்க....அறுபதுக்குள்ளேயே, ஆஞ்சியோ, டயாலிசிஸ், சர்க்கரை, உப்பு, புளி என்று நெருக்கடிகள் தாங்க முடியல... இதுல நூற்று இருப்பதா. ஆள உடுறா சாமி" என்கிறீர்களா. கவலையை விடுங்க, இந்த காலத்துக்கு அது செல்லாது. அறுபதாம் கல்யாணத்தின் முக்கியத்துவத்தை சொல்லத்தான் இந்த கணக்கு. நூற்று இருபதில் பாதி அறுபது அல்லவா? அறுபது வயதை கடந்தால், ஆயுளில் பாதியை வெற்றிகரமாக (சிரிக்காதீர்கள்) கடந்துவிட்டதை அறிவிப்பது ஒரு காரணம். மீதி பாதியை நல்லபடியாக கடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுவதும், நற்செயல்களில் ஈடுபடுவதும் மிக முக்கியம். இன்னொரு காரணமும் இருக்கிறது. தமிழ் வருடங்களின் மொத்த எண்ணிக்கை அறுபது. 'பிரபவ' வருடத்தில்...