கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்! (இறுதி பாகம்)
சென்ற பதிவில் மாங்கல்யதாரணம், அதை தொடர்ந்து என்மன வானில் சிறகை விரித்த வண்ண பறவைகளையும் பார்த்தோம். உணர்வு பூர்வமான அந்த நிகழ்வுக்கு பிறகு, நாங்கள் ஆசீர்வாதம் பெறுவதும் (வயதில் மூத்தவர்களிடம்) பின்னர் இளையவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவதும், நடைபெற்றது. நான் சிறுவனாக இருந்த காலங்களில், ஒரு வழக்கம் இருந்தது. எங்கள் வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் சரி, அல்லது நாங்கள் உறவினர் வீட்டிற்கோ, வேறுஒரு பெரியவர் வீட்டிற்கு சென்றாலும் சரி, உடனே அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். மிகவும் நல்ல செயல் அல்லவா!, ஆனால் இதில் ஒரு முக்கியமான பயன் இருக்கிறது. காலில் விழுந்து எழுந்ததும், ஆசீர்வாதத்தோடு, ஐம்பது பைசாவோ, ஒரு ரூபாயோ நிச்சயம் கிடைக்கும். அந்த காலத்தில் இந்த காசை கொண்டு, என்னென்னவோ வாங்கலாம், அல்லது உண்டியலில் போட்டு சேர்த்து வைக்கலாம். இந்த வழக்கம் இப்போது குறைத்திருப்பது நிதர்சனம். கொடுக்கும்போதுதான் கொடுப்பவருக்கும், பெறுபவருக்கும் ஆனந்தம் என்பது என் எண்ணம். அந்த நினைவுகளோடு, நாங்கள் ஆசீர்வாதம் பெற்றும், வழங்கியும் மகிழ்ந்தோம். முடிவாக ஆரத்தி எடுக்கப்பட்டு விழா...