Posts

Showing posts from September, 2026

கடவூர் டூ காத்மாண்டு! (பாகம்-8)

இரண்டாம் நாள் பயணம் இனிதே முடிந்தது. அன்று இரவு எப்படியோ நேபாளி ஸ்பெஷல் அயிட்டமான “மோமோ” வை ருசி பார்த்துவிடுவது என்று தீர்மானித்தோம். நல்ல வேளையாக அது நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே கிடைத்து விட்டது. ஆனாலும் தாய் “மோமோ”வுக்கு ஈடு இல்லை. கொஞ்சம் “சப்” என்று இருந்ததுபோல் தோன்றியது. எனினும், அந்த ஊர் உணவை சாப்பிடுவது ஒரு சுகம்தான். அன்றைய பொழுதை கழித்து விட்டு மறுநாள் காலை அடுத்த சுற்றுலாதலமான ‘பக்தபூர்” செல்ல தயாரானோம். எங்களுக்கு முன்னதாகவே எங்கள் கார் தயாராக இருந்தது. ஐந்து பேரும் எங்களை வண்டியில் நுழைத்து கொண்டவுடன் “போலாம் ரைட்” என்று கிளம்பினோம். இன்றும் காலையிலேயே ஏராளமான வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. அரை மணிநேரம் கழித்து பக்தபூர் வந்து சேர்ந்தோம். இந்த முறை தயாராக நேபாளி கரன்சியை எடுத்து கொண்டு சற்றே நிம்மதியாக ஊருக்குள் காலை வைத்தோம். “அடடா, எவ்வளவு புத்திசாலி” என்று சொல்லுகிறீர்களா, கொஞ்சம் பொறுங்கள்.  முதலில் நாங்கள் பார்த்த இடம், நேவாரி மொழியில் “லுண்டி அஜிமா” என்று அழைக்கப்படும் இந்திராயணி கோயில். எட்டு அன்னை தேவிகளில் ஒருவர். பக்தாபூர் தர்பாரின் வடமேற்கில், ஒரு சிறிய ...