Posts

Showing posts with the label சிந்தனை துளி

வெட்கம்,..வெட்கம்,..வெட்கம்,.......

நிர்வாணம் மறைந்து இலைகள் உடலை மறைத்தது, இலைகள்மறைந்து நூலாடை உடலை மறைத்தது, நூலாடை பட்டாடையாய்மாறி, நாகரிகம் வளர்ந்து, சிந்தனையின் பயனாய் உருப்பெற்று விஞ்ஞானம், கல்வி, வளர்ந்தது. ஆனால், ஐயகோ மானுடம் தொலைந்தது. மனித குலத்துக்கு வேட்டை ஆடும் வேட்கை பிறந்தது. விலங்குகளை வேட்டை ஆடி களைத்து, இன்று மனிதனை வேட்டை ஆடும் ஆவல் பிறந்தது. இந்த வேட்டை இணைய வலைக்குள் புகுந்தது. வெட்கி தலை குனியும் தருணம். குலத்தை கூறி சாடிக்கொள்ளும் ஈனமான நிலைக்கு நம்மை தள்ளியவர்கள் யார் ? ****அரசியல் வாதிகளா? ****உச்ச நீதி மன்றமா? ****நம் மனதுக்குள் புதைந்து கிடக்கும் அசிங்கங்களா? சிந்திக்க தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள்.